பெரியார் கேட்கும் கேள்வி! (207) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 3, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (207)

இந்தித் திணிப்பின்மூலம் பார்ப்பனரல்லாத திராவிடர்களை உத்தியோகங்களிலிருந்து ஓட்டி ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்பதே தவிர, இதற்கு வேறு என்ன கருத்து, நியாயம் சொல்லிவிட முடியும்? இந்தி வருகையால், வடநாட்டு லம்பாடிக் கூட்டம் வாணிகத்தால் செழிக்கவும், அரசாங்க லகானை இழுத்துப் பிடித்து அடக்கி ஆளவும் பயன்படுமே தவிர, இந்த நாட்டுப் பெருங்குடிமக்கள் கொள்ளை யடிக்கப்படவும், சுரண்டப்படவும், அரசியலில் மீளாத அடிமை களாக்கப்படவும் பயன்படுமே தவிர, வேறு எந்த காரியத்துக்குப் பயன்படுவதாக இருக்க முடியும்?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 3.7.1948

மணியோசை

No comments:

Post a Comment