ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பில் பிப்ரவரி 14 அன்று 'திராவிடம் வெல்லும்' சிறப்பு அரங்க கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக துணைத் தலைவர் கவிஞர்
கலி.பூங்குன்றன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், அமைப்பு செயலாளர் ஊமை.செயராமன், கிராமப்புற பிரச்சார அமைப்பாளர் அதிரடி அன்பழகன், தொழிலாளர் அணி அமைப்பாளர் திருச்சி சேகர், மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டி, கலைமணி ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக ஆத்தூரில் மாவட்டக் கழகம் சார்பில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை மாவட்ட தலைவர் த.வானவில், மாவட்ட செயலாளர் நீ.சேகர் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.


No comments:
Post a Comment