யாருக்குக் கசப்பு?
* கல்வி தொடர்பான மத்திய அரசின் கலந்துரையாடலில் மந்திரிகள் மட்டத் திலான ஆலோசனை நடத்தாததால் தமிழக அரசு கடுப்பு.
- ‘தினமலர்', வெளியிடும்
தலைப்புச் செய்தி
>> கடுப்பல்ல - உரிமையின் வெளிப்பாடு - தினமலருக்குத்தான் கடுப்பு - காரணம் தெரிந்ததே!
செய்து பாருங்கள் தெரியும்
* புதிய கல்வியை அடுத்த மாதம் அமல்படுத்துவார்களாம்!
>> வினாச காலே விபரீத புத்தி!
காலம் மாறுது
* உ.பி.யில் திருமணம் - திருமண மேடையில் மணமகளுக்கு ஒரு சந்தேகம். மணமகன் படித்தவனா என்று சோதிக்க இரண்டாம் வாய்ப்பாடு சொல்லச் சொல்லி இருக்கிறார். மாப்பிள்ளை ‘திருதிரு' வென்று விழித்துள்ளார். விளவு திருமணம் நின்றது.
>> அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற காலம் போயே போச்சே!
ஒழுக்கம் கெட்டால் தண்டனைதான்!
* திரிணாமுல் காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வுக்கு நான்தானே முன்னாலேயே வந்தேன். எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுக்காமல், எனக்குப் பிறகு வந்த சுதேந்து அதிகாரிக்குக் கொடுப்பதா?
- முகுல்ராய் கேள்வி
>> ஓ, கட்சி தாவுவதில்கூட சீனியாரிட் டியா?
‘நாமக்' கடவுளின் ஊழியர் ஆயிற்றே!
* ஓராண்டுக்குமுன் உயிர் இழந்த திருப்பதி தேவஸ்தான ஊழியர் வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்.
>> பணம் ‘பாதாளம் வரை' பாயும்!
அடங்காவிட்டால் அடக்கு!
* சென்னையில் 3082 வாகனங்கள் பறிமுதல்.
>> ‘உனக்காக - எல்லாம் உனக்காக - இந்த உயிரும், உடலும் இருப்பது உனக்காக' - இது ஒரு பாடல்.
உயிருடன் விளையாட்டா?
* போலி ரெம்டெசிவர் மருந்தால் மருத்துவர் உயிரிழப்பு. மருத்துவமனைமீது நடவடிக்கை.
>> கோவில் ஒரிஜினல் சிலைகளையே திருடிவிட்டு, அதற்குப் பதிலாக போலி சிலைகளை வைக்கும் நாடாயிற்றே!
அருமருந்தன்ன யோசனை?
* கிராமப்புறங்களிலும் காய்ச்சல் அதிகரிப்பு - நடமாடும் மருத்துவமனைகள் அவசியம்.
- கே.பாலகிருஷ்ணன்,
சி.பி.எம். மாநில செயலாளர்
>> நல்லா இருந்த கிராமமும் கெட்டுப் போச்சே!
No comments:
Post a Comment