ஜாதி ஒழிப்பையும், வருணாசிரமப் பாதுகாப்பான பார்ப்பன வைதீக சனாதன மதமான ‘ஹிந்து மதம்' என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட ஆரிய மதத்தின் பேதங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோலுரித்துக் காட்டி திராவிட உணர்வுக்கு முன்னோடி யாகத் திகழ்ந்த பண்டித அயோத்திதாசர் அவர்களின் பிறந்த நாளில் ஏடு (‘‘ஒரு பைசா தமிழன்'') மூலம் உணர்ச்சியூட்டி, பகுத்தறிவுக் கருத்துகளை பவுத்தம் பரப்புவதால், அதனைப் பரப்பிட சமத்துவக் கொடியேற்றிய சரித்திர மாமனிதர் அயோத்திதாசர் கண்ட ஜாதி, மத, பேதமற்ற புது உலகைப் படைக்க அவருடைய பிறந்த நாளான இன்று (மே 20) உறுதியேற்போம்!
அவர் தந்த சுடரை அணையாமல் காப்போம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.5.2021

No comments:
Post a Comment