முத்திப்
போன வெறியர்கள்
தத்தி
என்றனர் இவரை அன்று
கத்தி
என புரிய வைத்தார் இன்று !
சுடலை
என்றோரையும்
விடலை
இவர்
வேட்டையை
முடித்தார்
கோட்டையை
பிடித்தார் !
முதல்வராகவே
முடியாது என்று
ஜோதிடம்,
ஜாதகம் பெயரால்
கட்டம்
சரியில்லை என்றனர் - சொன்னவர்
விட்டம்
பார்க்க வீட்டிற்கு சென்றனர் !
வெற்றிவேல்
வீரவேல் என்று
வெறி
கொண்டு கிளம்பினார்கள் சத்தமாய்
முத்துவேல்
கருணாநிதி ஸ்டாலின்
முடித்து
விட்டார் அவர்களை மொத்தமாய் !
இலட்சிய
வழியில் போர் தொடுத்தார்
இனப்
பகைக்கு விடை கொடுத்தார்
பத்தாண்டு
இருள் கிழித்த பரிதி
இனி
எப்போதும் அவர் ஆட்சி உறுதி !
ஊடகமும்
தேர்தல் ஆணையமும்
ஊரில்
உள்ள எல்லாக் கட்சிகளும்
மறைமுகமாய்
ஓரணியில் நின்றது
இறுதியில்
திராவிடம் தான் வென்றது !
பொறுப்பேற்று
சிறப்பார் பலர் - இவர் போல்
சிறப்போடு
பொறுப்பேற்றார் எவரும் இலர் !
திசையெட்டும்
பரவிடும் ஒளியாய்
திக்கற்றவர்க்கு
சரியான வழியாய்
திராவிடம்
காத்திடுவார் விழியாய் !
வறியோரின்
வயிற்றுக்கு பாலாய்
வலுவுள்ள
கைகளுக்கு வேலாய்
பெருந்தொற்று
காலத்து மருந்தாய்
கடும்பசி
நேரத்து விருந்தாய்
வந்தார்
தளபதி முதல்முறை
வாழ்த்திடும்
எங்கள் தலைமுறை !!
- இராம.
வைரமுத்து
கழக
வழக்குரைஞர், மதுரை

No comments:
Post a Comment