டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· கரோனா தடுப்புப் பணியில் மோடி அரசு தோல்வி அடைந்து உள்ளது. கடந்த கால நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அரசின் செயல்பாடுகளால் தான் இந்த அளவிற்காவது இந்தியா பாதுகாக்கப்படுள்ளது என சிவசேனா தனது ‘சாம்னா’ பத்திரிக்கையில் மோடி அரசைச் சாடியுள்ளது.
· மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை சீரமைத்திட ஒன்றிய அரசின் கேபினட் செயலாளர் தலைமையில் 12 பேர் கொண்டு மருத்துவ நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.
தி டெலிகிராப்:
· இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ‘லான்செட்’ மருத்துவ வார இதழ், மோடி அரசு தனது தவறுகளை ஒப்புக் கொண்டு, கரோனா தடுப்புப் பணியில் அறிவியல்பூர்வமான நடவடிக்கையை மேற் கொள்ள வலியுறுத்தியுள்ளது.
· டில்லியைச் சேர்ந்த எழுத்தாளர் வினீதா மொக்கில், மோடியின் பா.ஜ.க.விற்கும் அதன் துணை அமைப்புகளுக்கும் நிதி உதவியை நிறுத்திக் கொள்ளும்படியும், கரோனா தடுப்புப் பணியில் தோல்வியுற்ற மோடி அரசுக்கு தரும் தண்டனையாக இது இருக்கட்டும் என்றும் “அமெரிக்காவில் உள்ள மோடி பக்தர்களுக்கு ஒரு திறந்த கடிதம்” எழுதியுள்ளார்.
- குடந்தை கருணா
9.5.2021
No comments:
Post a Comment