செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 12, 2021

செய்தியும், சிந்தனையும்....!

தற்கொலை தீர்வா?

*           உசிலம்பட்டியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அய்வர் தற்கொலை.

>>           இதைத் தலையெழுத்து என்று சொல்லப் போகிறார்களா - நாட்டின் பொருளாதார நிலையின் விபரீதம் என்று எழுதப் போகிறார்களா?

இதுதான்இந்து ராஜ்ஜியம்!'

*           உத்தரப்பிரதேசத்தில் கரோனாவால் மரணித்த நோயாளிகளின் உடல்கள் கங்கையில் வீசப்படுகின்றன.

>>           சாமியார் ஆட்சியல்லவா - இன்னும் என்னென்ன வெல்லாம் நடக்குமோ?

வேகம் - விவேகம்!

*           அத்தியாவசிய தொழிற்சாலைகள் செயல்படுவதில் இடர்ப்பாடா? 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள உதவி சேவை மய்யம்.

>>           24 மணிநேரமும் செயல்படுவதுதான் நல்லாட்சி!

நல்ல சமிக்ஞை!

*           தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவுடன் கூட்டு - அமெரிக்கா விருப்பம்.             

>>           புதிய அதிபர் ட்ரம்ப் அல்ல!

பணம் தூங்கி என்ன பயன்?

*          கோவில்கள்மூலம் தினமும் ஒரு லட்சம் பேருக்கு மதிய உணவு - அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்.

>>           வடலூர்போல (அணையா நெருப்பு) எப்பொழுதுமே செய்யலாமே!

No comments:

Post a Comment