மத்திய அரசின் தெளிவற்ற போக்கால் இந்தியா ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 8, 2021

மத்திய அரசின் தெளிவற்ற போக்கால் இந்தியா ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது!

மோடிக்கு ராகுல் கடிதம்

 புதுடில்லி, மேகரோனா விவகாரத்தில் மத்திய அரசின் தெளிவற்ற போக்கால் இந்தியா ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்.பி.யு மான ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள 3 பக்க கடிதத்தில், கரோனா விவகாரத்தில் உங்கள் உங்கள் அரசாங்கத்தின் தெளிவான மற்றும் ஒத்திசைவற்ற போக்கு காரணமாக, கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. மேலும் தடுப்பூசிக்கும் கட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவை மிகவும் ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறது, இப்போது அது வெடிக்கும் வகையில் வளர்ந்து வருகிறது.

தொற்றுநோய் மற்றும் அரசாங்கத்தின் மூலோ பாயத்தின் பற்றாக்குறையால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்னை மீண்டும் உங்களுக்கு எழுதும்படி கட்டாயப்படுத்தியுள்ளது,

எனது பரிந்துரைகள், பிறழ்வுகள் மற்றும் தரவுகளை விஞ்ஞான ரீதியாகக் கண்காணிக்கவும், விரிவாக தடுப்பூசி போடவும், பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு நிதி உதவியை வழங்கவும், கால வரையறையில் கருதப்படும் என்று நம்புகிறேன். தொற்றுநோய்க்கு எதிரான இந்த போரில் நாங்கள் ஒன்றாக நிற்கிறோம். தோற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment