தி.மு.க. அமைச்சரவையில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கே.என்.நேரு திருச்சி வந்தார். அமைச்சர் கே.என்.நேருவை கழகம் சார்பில் திராவிடர் தொழிலாளர் அணி மாநிலசெயலாளர் மு.சேகர் தலைமையில் கழகத் தோழர்கள் சந்தித்து சால்வை மற்றும் புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன், முன்னாள் மாநகர தலைவர் மருதை கல்பாக்கம் ராமச்சந்திரன், காட்டூர் சங்கிலி முத்து, காமராஜ் பாலகிருஷ்ணன், ராஜேந்திரன் ,ஜெயில் பேட்டை சேவியர் பிரான்சிஸ், சோமரசம்பேட்டை அறிவுச் சுடர், விடுதலை மாவட்டச் செய்தியாளர் மா.செந்தமிழினியன், புகைப்பட கலைஞர் மு.பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment