அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் வா.ரங்கநாதன், ஆனந்தன், கார்த்திகேயன், வெங்கடேசன், ஞான மணியன், சபரிநாதன்,. சிவஞான பிரகாஷ் அருண், குமாரசாமி, அன்பு, வீரபாபு, பாலகுரு, சிவசங்கர், இராஜ வண்ணரசு ஆகியோர் கழகத் தலைவரைச் சந்தித்து சால்வை அணிவித்து மகிழ்ந்தனர்.பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி அளிக்கப்பட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இதற்கு முன்னுரிமை கொடுக்க ஆவன செய்வதாக கழகத் தலைவர் கூறினார்.
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துகளை பெற்றார். அவருக்கு 'திராவிடம் வெல்லும்' புத்தகத்தை தமிழர் தலைவர் பரிசாக வழங்கினார். (6.5.2021)
"கணையாழி" இதழின் ஆலோசகர் தமன் பிரகாஷ், மாநில சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினர் யு.சுதிர் லோதா ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து "கணையாழி" இதழ்களை நூலகத்திற்கு வழங்கினர். உடன் பவர்லால் ஜெயின், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் (சென்னை, 6.5.2021).



No comments:
Post a Comment