6.6.2021
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· 2022இல் நடைபெற உள்ள ஆறு மாநில தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆலோசனை.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
· 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து. மதிப்பெண்களை எவ்வாறு வழங்குவது என்பதை முடிவு செய்ய குழு. தமிழ் நாடு அரசு அறிவிப்பு
· தமிழ் நாட்டில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காய்கறி, பலசரக்கு, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· கோவிட்டின் பேரழிவுகரமான இரண்டாவது அலைகளின் மோசமான நாள்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காணப்படவில்லை. இரண்டாவது அலையை மிகக் குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தினோம் என்றும், இந்தியா மிக வேகமாக தடுப்பூசி போட்டதில் உலகில் சாதனை படைத்துள்ளது என்றும் பொய்யுரைக்க கடந்த வாரம் அமித் ஷா திடீரென தோன்றினார் என மூத்த பத்திரிக்கையாளர் தல்வீன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
· யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் முன்னேற்றம் என்ற பெயரில் குழப்பத்தை சிறப்பு அதிகாரி செய்வதாக மத்திய அரசின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். - குடந்தை கருணா
No comments:
Post a Comment