புதுடில்லி, ஜூன் 26- ஒன்றிய அரசின் மேனாள் நிதியமைச்சரும், காங்கி ரஸ் மூத்த தலைவருமாகிய ப.சிதம்பரம் சுட்டுரைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘‘காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் மற்றும் தலைவர்கள் முத லில் மாநில தகுதி வழங்க
வேண்டும் என்று விரும்புகிறார்கள். பின்னர் தேர்தல்களை நடத்த விரும்புகிறார்கள். ஒன்றிய அரசின் பதில் முதலில் தேர்தல், பின்னர் மாநில தகுதி என்று கூறுகிறது. குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு முத லில் மாநில தகுதி வழங்க வேண்
டும். அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும். மாநிலம் தான் சரியான முறையில் தேர்தலை நடத்த முடி யும். ஆனால் ஒன்றிய அரசோ முத லில் தேர்தல் நடத்த முயலுகிறது. வண்டியால் குதிரையை இழுக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment