நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 4, 2021

நன்கொடை


பெரியார் பற்றாளரும், பெரியார் புத்தக நிலையத்தின்மேலாளருமாகிய ..நடராசன் அவர்கள்விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரம் நன் கொடையை தமிழர் தலைவரிடம் வழங் கினார். நன்றி!

- - - - -

மறைந்த சுயமரியாதைச் சுடரொளி - பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று,  "தடுமாற்றம் இல்லாமல், தடமாற்றம் இல்லாமல் நீங்கள் காட்டிய படியே - தந்தை பெரியாரின் கொள்கை வழியில், தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்களின் தலைமையில் எந்நாளும் எந்நாளும் நாங்களும் -  நாளை தொடரும் நம் பின்னோரும்" என சூளு ரைத்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 1000 ரூபாய் நன்கொடையை பசும்பொன் செந்தில்குமாரி - இசைஇன்பன் வழங்கினர். நன்றி!

- - - - -

அறிவு வழி காணொலி நிகழ்ச்சியின் 282ஆவது நிகழ்வு 1.6.2021 இரவு 8.15 முதல் 10 மணிவரை நடைபெற்றது. '87ஆம் ஆண்டு விடுதலையின் பிறந்த நாள்' என்ற தலைப்பில், சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் காப்பாளர் சே.முனியசாமி ரூ. 5000 விடுதலை வளர்ச்சி நிதியாக நிகழ்விலே அறிவித்தபடி, வழங்கினார். நன்றி

- - - - -

சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன் வாழ்விணையரும் மேனாள் பொதுக்குழு உறுப்பினமான சவுந்தரி நடராசன் 74ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாகவும், அவர்களின் பெயர்த்தியும், செஞ்சி .கதிரவன்-வெண்ணிலா மகளு மான .ஆற்றல்அரசி 22ஆம் பிறந்த நாள் (4.6.2021) மகிழ்வாகவும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500 நன் கொடை அளிக்கப்பட்டது. வாழ்த்துகள்! நன்றி!

No comments:

Post a Comment