பள்ளிப் பருவத்திலே கொள்கைப் பாடம் நீ கற்றாய்
கன்னிப் பருவத்திலே நீ காளையெனத் துணிவு கொண்டாய்
எண்ணங்கள் எரிமலையாய் எழுதி நீ புகழ் பெற்றாய்
கோவில்களா? கொள்ளைக் கூடாரங்களா ? நீ கேட்டாய்
அம்பாள் என்றடா பேசினாள் ?
தோல்வியில்லாத் தேர்தலென்ன? நீ தொடாத சிகரமுண்டா ?
காணாத எதிர்ப்பா? அவமானமே உரமாக்கி ஆளவந்தாய்! நீ தானே
அளப்பில்லாத் திட்டங்கள் அன்புடனே தந்தாய் ஏழைகட்கு !
பெண்கள் அடைந்திட்ட நன்மை சொன்னால் நாள்கள் போதாதே!
பெரியாரை அண்ணாவை இதயத்தில் நீ நிறுத்திச் செய்ததெல்லாம்
உலகம் போற்றிடுதே, இன்றும் உன் பெயரைச் சொல்லிடுதே !
வாழ்கின்றாய் நீ எங்கள் கொள்கைச் சிங்கமென
சீரிய பகுத்தறிவு வார்த்தையின் முழுப் பொருளே
"கலைஞர் " என்று சொன்னால் உலகே அறிந்திடுமே !
- மருத்துவர் சோம. இளங்கோவன்
இயக்குநர், பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா

No comments:
Post a Comment