கோயிலை அரசியலாக்குவோர்களால் ஆபத்து! ஆபத்து!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

கோயிலை அரசியலாக்குவோர்களால் ஆபத்து! ஆபத்து!!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை என்பது - மனித உரிமைப் போராட்டம்! ‘பிறப்பின் அடிப்படையில் உயர் ஜாதி - முன்னுரிமைகள் எல்லாமே எங்களை நோக்கித்தான்!’ என்று விரலை நீட்டும் வேதிய புரத்தாரின் ஆணவக் கோட்டையின் அடித்தளத்தை அடித்து நொறுக்கும் அடிப்படை உரிமைப் போராட்டம்!

ஜாதி - தீண்டாமை என்னும் மானுடத்தைக் கவ்விப் பிடித்த கரோனாவை விட கழிசடை நோயின் வேர்புரத்தை வீழ்த்தும் விவேகப் பே(£)ராயுதம் ஏந்தும் விழிப்புறு போராட்டமாகும்.

கடவுள்தான் மக்களைப் படைத்தார் - மக்கள் எல்லாம் கடவுளின் குழந்தைகள்தான் என்று ஒரு பக்கம் நீட்டி முழங்கிக் கொண்டே, கடவுள் வசிப்பதாகக் கூறப்படும் கருவறையில் ஜாதியைத் திணித்து சல்லடங்கட்டும் சவுண்டிகளின் சனாதன திமிருக்கு சம்மட்டி அடி கொடுக்கும் சமத்துவ சமதர்மப் போராட்டமாகும்.

உண்மையைச் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ். கூட இதனை எதிர்க்கவில்லை - பிஜேபி கூட பச்சைக் கொடி காட்டி விட்டது. சங்பரிவார்களும்சரிதான்என்றுசரிகம பதனிசாபாடி விட்டது.

அப்படியென்றால் எதிர்ப்போர் யார்? எதிரிகள் என்று தங்கள் முகவரிகளை முகக்கவசம் இல்லாமலேயே காட்டுவோர் யார்? யார்?

பார்ப்பனர்கள்! பார்ப்பனர்கள்!!  பார்ப்பனர்கள்தாம்! கூக்குரல் போடுகிறார்கள் - ‘சத்ரு சம்ஹார யாகம்நடத்துகிறார்கள். அதாவது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டத்துக்குக் காரணமானவர்களும், சட்டம் இயற்றுபவர்களும் சாக வேண்டுமாம். ஆகா., எவ்வளவு பரந்த உள்ளம் இந்தப் பார்ப்பனப் பரதேசி கூட்டத்துக்கு!

இவர்களின் சனாதனம் என்பது - மனித வெறுப்பின் -பகைமையின் பச்சைப் பாசிசமே என்பது இப்பொழுது புரிகிறதா?

இப்பொழுது பார்ப்பனர் என்ன செய்ய ஆரம்பித்து விட்டார்கள் தெரியுமா? ‘துக்ளக்கூட்டத்தின் துன்புத்தி என்ன தெரியுமா?

பார்ப்பனர் அல்லாதாரின் கண்மூடிப் பக்தியைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி - கலகம் விளைவிக்க கத்தி தீட்டுகிறார்கள்.

பரம்பரைப் பரம்பரையாகப் பழக்கத்தில் இருந்து வரும் பார்ப்பனர் அர்ச்சகர் முறையை மாற்றுவதா? என்று பார்ப்பனர் அல்லாதவரையே ஏவி விடும் - அவாளுக்கே உரித்தான பிரித்தாளும் சூழ்ச்சியை அரங்கேற்ற ஆரம்ப வேலையில் இறங்கியுள்ளனர்.

தந்தை பெரியார் சொல்லுவாரே - நினைவு இருக்கிறதா? “இராமன் காட்டுக்குப் போனானே - எத்தனைப் பேர்? இராமன், சீதை, இலட்சுமணன் ஆகிய மூன்றே மூன்று பேர்கள்தானே!

இந்த மூன்று பேரும் தான் இலங்கையின் மீது படையெடுத்து  பேரரசன் இராவணனை வீழ்த்தினார் களாம்?

அவன் வெற்றி பெற்றதாகக் கூறப்படு கிறதே - விபீடணன்- சுக்ரீவன் கூட்டத்தாரின் தயவால் தானே - பதவி எச்சில் துண்டுக்காகத்தான் பணிந்த தாசர்களின் புத்திதானே - இராமனுக்குப் பின் பலம்.

எனக்குள்ள கவலையெல்லாம் தமிழர்களில் விபீடணர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுதான்என்றாரே தந்தை பெரியார். எத்தகைய மனப் புண்!

இப்பொழுது என்ன செய்கிறார்களாம்? இன்றைய பார்ப்பனக் கூட்டத்தின் அதிகாரப்பூர்வ இதழாகவே அவதாரம் எடுத்துள்ளதுக்ளக்கில் (8.9.2021, பக்கம் 19) வெளியாகி இருப்பது என்ன?

ஆண்டாள் கோவிலில் திரண்ட அனைத்து ஜாதியினர்என்ற தலைப்பில் ஒரு (£)ட்டுரை வெளியாகியுள்ளது.

சிறீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கோயிலில் பல்வேறு ஜாதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடினார்களாம்.

சிறீவில்லிபுத்தூர் கோவிலின் அர்ச்சகர் மற்றும் பரிசாரக மரபில் அரசு தலையிட்டு அராஜகம் செய்யக் கூடாதுஎன்று 18 நாட்டாண்மைகளும், ஜாதித் தலைவர்களும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றினார்களாம்.

ஆக ஒரு கோயிலை அரசியல்படுத்தி யுள்ளனர் ஜாதிகளின் பெயரால்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை என்பது பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதை உணர்வு - என்ற அடிப்படையில் ஒன்று திரண்டு, சிறீவில்லிப்புத்தூர் கோயில் வளாகத்துக்குள் கூட்டம் நடத்தித் தீர்மானம் போடலாமா?

சிறீவில்லிபுத்தூர் கோயில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டுள்ளார்கள்? வீண் பிரச்சினைக்கு விதை நட வசதி செய்து கொடுக்கிறார்களா?

ஆண்டாள் கோயிலுக்கு வந்து தீர்மானம் போடப்பட்டது உண்மை என்றால், அவர்களுக்கு ஒரு முக்கிய கேள்வி இருக்கிறது.

உங்களுக்கும் சேர்த்துதான் இந்த அர்ச்சகர் சட்டம். நீங்கள் எல்லாம் சூத்திரர்களாம் - மனுதர்மப் படி சொல்ல வேண்டுமானால் விபச்சாரி மக்களாம். அதனால் நீங்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் நுழைந்தால் கர்ப்பக்கிரகம் தீட்டுப்பட்டு விடுமாம்.  - சாமி சிலையை தொட்டால் சாமியின் சக்தி மாயமாக மறைந்து செத்துப் போய்விடுமாம் - ஏற்றுக் கொள்கிறீர்களா?

பக்தியில் மூழ்கிக் கிடக்கும் பார்ப்பனர் அல்லாத அருமைச் சகோதரர்களே, நீங்கள் நம்பும், மதிக்கும் அந்தக் கடவுள் உங்களுக்கெல்லாம் தகப்பன் அல்லவா - படைத்தவன் அவர்தான் என்று நம்புகிறீர்களே, அந்தத் தகப்பனை அவனின் பிள்ளைகளாகிய நீங்கள் தொட்டால் தகப்பன் செத்துப்போய் விடுவானா?.

இதன் மூலம் நீங்கள் நம்பும் உங்கள் தகப்பன் கடவுளைக் கொச்சைப்படுத்துவது யார்?

பக்தர்களே பதறாமல் சிந்திப்பீர்!

பார்ப்பனர் விரிக்கும் விஷம வலையில் சிக்காதீர்!

சீரழிந்து போகாதீர்! எச்சரிக்கை!

No comments:

Post a Comment