அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களோடு சேர்த்து தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே பாதை, கடற்கரைகள் மற்றும் கனிமவளங்கிடைக்கும் மலைப்பகுதிகளை விற்பனைசெய்யும் ஒன்றிய அரசின் முடிவை கிண்டல் அடிக்கும் வகையில் நடைபாதையில் குடியிருக்கும் ஒரு குடும்பத்துச் சிறுவன் நாம் தூங்கும் பகுதியையும் விற்றுவிடுவார்களா என்று கேள்விகேட்கும் கருத்துச்சித்திரம்.
இந்தியாவில் எந்த எந்த மாநிலத்தில் எவ்வகை புற்றுநோய்கள் பரவுகிறது என்பதைக் காட்டும் புள்ளிவிவரத் தகவல். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வயிறு மற்றும் கழுத்துப்பகுதி புற்றுநோய் அதிகம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது, இதன் மூலம் சுகாதாரமான உணவுகளை உண்பது மற்றும் அலுவலகம் மற்றும் கணினி தொடர்பான வேலைசெய்யும் போது நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் இருப்பதை தவிர்த்து மாற்றம் கொண்டுவந்தால் தமிழ்நாடு புற்று நோயிலிருந்து விடுபடலாம்.


No comments:
Post a Comment