தமிழ்நாட்டில் புதிதாக 1329 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

தமிழ்நாட்டில் புதிதாக 1329 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை,அக்.11- தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச் சகம் வெளியிட்ட தக வலின்படி, தமிழ்நாட்டில் நேற்று (10.10.2021) புதிதாக 1329 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கரோ னாவால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண் ணிக்கை 26 லட்சத்து 78 ஆயிரத்து 265 ஆக அதி கரித்துள்ளது. தமிழ்நாட் டில் கரோனா பாதிப்பால் நேற்று 15 பேர் உயிரிழந் துள்ளனர். இதன்மூலம் இது வரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 35 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 436 பேர் சிகிச்சைக்கு பெற்று குண மடைந்துள்ளனர். இத னால் கரோனா பாதிப் பில் இருந்து குணம டைந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 26 ஆயிரத்து 352 ஆக உயர்ந்துள்ளது.   தமிழ் நாடு முழுவதும் தற்போது வரை 16 ஆயிரத்து 130 பேர் கரோனா தொற் றிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் பாதித்தவர் களின் எண்ணிக்கை 164 ஆக இருந்த நிலையில் நேற்று 171 ஆக உயர்ந்து உள்ளது.

No comments:

Post a Comment