துபாய், அக். 13- சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருக்கும் தொழிற்சாலை கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய் வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் தொழிற்சாலை கழிவு கள் சுற்றுப்புற சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து உள்ளன. இந்நிலையில் செப்பு எனப்படும் தாமிரம், தொழிற் சாலைகளில் அதிகளவில் பயன் படுத்தப்படுகிறது. செப்பு உற்பத்தி யில் முன்னிலை வகிக்கும் நாடுக ளில் ஒன்றாக சிலி திகழ்கிறது. இங்கு சுரங்கங்களில் இருந்து தாமிரம் அதிகம் எடுக்கப்படுகிறது.
மேலும் உலோகக் கழிவுகளும் அதிகளவில் சேர்ந்து சுற்றுப்புற சூழலுக்கு பெரும் கேடு விளைவிக் கிறது. இதனை சீர்படுத்தும் வகை யில் சிலியை சேர்ந்த நுண்ணுயிர் ஆய்வாளரான நாடாக் ரியல்ஸ் என்பவர் உலோகத்தை சாப்பிடும் பாக்டீரியா மூலம் ஆய்வு மேற் கொண்டார். இது வெற்றியடைந் துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சான்டியாகோவிற்கு வடக்கே 1,100 கி.மீ. தொலைவில் உள்ள அன் டோஃபகஸ்டா என்ற தொழில் நகரத்தில் உள்ள ஆய்வ கத்தில், 33 வயதான நாடாக் ரியல்ஸ் நுண்ணுயிர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தார். இவர் தாமிரம் பிரித்தெடுத்தலை மேம்படுத்த நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி ஒரு சுரங்க ஆலையில் சோதனைகளை நடத்திக் கொண் டிருந்தார். அப்போது அங்கு குவியும் கழிவுகள் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுப்பதை உணர்ந்தார். மேலும் அவற்றை சுற்றுச் சூழலுக்கு கேடின்றி அழிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆய்வில் ஈடுபட்டார்.
இதில் உலோகக் கழிவுகளை சாப்பிடும் பாக்டீரியாக்களை கண் டறிந்தார். ஒரு ஆணி அளவிலான உலோகத்தை பாக்டீரியாக்கள் சாப்பிட இரண்டு மாதங்கள் வரை ஆனது. தொடர்ந்து நடத்திய ஆய்வுகளில் முன்னேற்றம் ஏற் பட்டு மூன்று நாட்களில் ஒரு ஆணி அளவிலான உலோகத்தை காலி செய்ததின் மூலம் இந்த புதிய தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தலாம் என ஆய்வு முடிவை வெளியிட்டார். மேலும் இரசாயன மற்றும் நுண்ணுயிரியல் சோதனைகள் மூலம் இந்த பாக் டீரியா மனிதர்களுக்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக் காது என்பது நிரூபிக்கப்பட்டுள்ள தாகவும் தாமிரம் அல்லது பிற கனிமங்களின் பெரிய அளவிலான பிரித்தெடுத்தல் பணிகளை சுற்றுப் புற சூழலுக்கு பாதுகாப்பான வகை யில் இதன் மூலம் செய்ய முடியும் என ரியல்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொழில்நுட்பத் திற்கான காப்புரிமைக்கும் விண் ணப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment