ராகுல்காந்தி குற்றச்சாட்டு
ஜம்மு,அக்.8 ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது:-
காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. பண மதிப்பிழப்பு, சிறப்பு தகுதி ரத்து ஆகியவற்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்படவும் இல்லை, நிறுத்தப்படவும் இல்லை. இதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் ஒன்றிய அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்றார்.
No comments:
Post a Comment