நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும்

புதுடில்லி, நவ.6 நாட்டின் பொருளாதாரம், நடப்பு நிதியாண்டில் 10 சதவீதம் அல்லது, அதற்கும் கூடுதலாக வளர்ச்சியை காணும் என, நிடி ஆயோக்கின் துணை தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியீடு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது, ராஜீவ் குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:

நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். மேலும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கரோனாவிலிருந்து நாம் வெளிவந்துவிட்டால், நிச்சயமாக அடுத்த நிதியாண்டிலிருந்து 8 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை நாம் காண முடியும்.

பன்னாட்டு நிதியத்தின் அறிக்கையின்படி, அடுத்த அய்ந்து ஆண்டுகளுக்கு, மிக வேகமான வளர்ச்சி பெறும் நாடாக இந்தியா இருக்கும்.நிலைமைகள் மாறி வருகின்றன.

மக்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இந்தியர்கள் இப்போது நல்ல தரமான வேலைகளை பெற்று வருகிறார்கள். இருப்பினும், வேலை வாய்ப்புகள் என்பது நாம் விரும்பும் வகையில் வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment