லக்னோ,நவ.6- உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்திட காங்கிரசு கட்சிப் பொதுச்செயலாளர் பிரியங்கா தலைமையில் பாஜகவுக்கு எதிராக வலுவாக அணி திரட்டப்பட்டு வருகிறது.
அதற்கான செயல்களில்
முழுவீச்சில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா புதிய வியூகம் அமைத்து வருகிறார்.
இதில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), மறைந்த அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக்
தளம் (ஆர்எல்டி) ஆகிய கட்சிகளுடன் கூட்டணிக்கு முயற்சிக்கப்படுகிறது.
உ.பி.யில்
அடுத்த ஆண்டு நடை பெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரு
கின்றன. இங்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க முயற்சிக்கும் பாஜகவை வீழ்த்த
எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. இதில், முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் சிங் யாதவின்
சமாஜ்வாதி கட்சி, சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறது. மற்றொரு எதிர்க் கட்சியான
காங்கிரஸ், உ.பி.யின் முக்கியக் கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது.
மாயாவதியின் பிஎஸ்பி மற்றும் மறைந்த அஜித் சிங்கின் மகனான ஜெயந்த் சவுத்ரியின் ஆர்எல்டி
கட்சியை தன்னுடன் கூட்டணி சேர்க்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.
கடந்த வாரம்
லக்னோ விமான நிலையத்தில் ஜெயந்த் சவுத்ரியை சந்தித் தார் பிரியங்கா. அந்த வாய்ப்பை
பயன் படுத்தி ஜெயந்துடன் கூட்டணி பேச்சும் தொடங்கினார்.
மேற்கு உ.பி.யில்
அதிகமுள்ள ஜாட் சமூகத்தினரின் ஆதரவை ஆர்எல்டி பெற்றுள்ளது. இதன் ஆதரவின்றி காஜியாபாத்,
அலிகர், புலந்த்ஷெஹர், ஆக்ரா, மீரட், மதுரா, முசாபர்நகர், ஷாம்லி, பிஜ்னோர் ஆகிய மாவட்டங்களில்
வெல் வது கடினம் என்ற சூழல் உள்ளது. ஜாட் சமூத்தினரில் பெரும்பாலானோர் விவ சாயிகள்
என்பதால், அவர்களது டில்லி போராட்டத்துக்கு ஆர்எல்டி ஆதரவு அளித்தது. இந்நிலையில் ஜெயந்துடன்
கூட்டணி அமைக்க காங்கிரஸ் ரகசியப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
உ.பி. காங்கிரஸ்
நிர்வாகிகள் வட் டாரங்கள் கூறும் போது, “மேற்குப் பகுதியில் மட்டும் ஆர்எல்டி ஒதுக்கும்
தொகுதிகளை ஏற்பதற்கு பிரியங்கா ஒப்புக்கொண்டார். மற்ற பகுதிகளில் காங்கிரஸை அக் கட்சி
ஆதரிக்க வேண்டும். இதற்காக, பஞ்சாப் அல்லது சத்தீஸ்கரில் அடுத்து காலியாகும் மாநிலங்
களவை உறுப்பினர் பதவி ஜெயந்துக்கு அளிக்க முடிவாகியுள்ளது. இதேவகை யில் மாயாவதியையும்
காங்கிரசுடன் சேர்த்தால் வலுவான கூட்டணி அமைந்து விடும்”
என்று தெரிவித்தன.
உ.பி.யில்
கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதியுடன்
ஆர்எல்டி கூட்டணி அமைத்தது. இக்கூட்டணி எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும்
என ஆர்எல்டி அறிவித்துள் ளது. என்றாலும் அதற்கான தொகுதி உடன்பாடு இதுவரை ஏற்படாத நிலையில்
காங்கிரசுடன் கைகோக்க அக்கட்சி தயாராகி வருகிறது.
இதையடுத்து மாயாவதியுடனும் பேச்சுவார்த்தை நடத்த பிரியங்கா தயா ராகி வருகிறார். இவரது கட்சி மூலம் உ.பி.யின் தாழ்த்தப்பட்டோர் ஆதரவைப் பெற பிரியங்கா திட்டமிடுகிறார். ஏற்கெ னவே, ஓரளவுக்கான முஸ்லிம்கள் ஆதரவு காங் கிரசிடம் உள்ளது. காங்கிரஸ் அமைக்கும் வலுவான கூட்டணியால், அதிகமான முஸ்லிம் கள் ஆதரவுடன் பாஜகவை தோற்கடிக்கலாம் என பிரியங்கா வியூகம் அமைத்து வருகிறார்.
No comments:
Post a Comment