ஜாதி ஒழிப்பு என்றால் இந்தக் குருமூர்த்தி கும்பல் எங்கோ தேள் கொட்டியதுபோல துடியாய்த் துடிக்கிறது.
திராவிடர் கழகத் தலைவர் கூறியுள்ளபடி ஒரே ஜாதி (மனித குலம் ஒன்றே) என்ற வகையில் சட்டப்படி ஜாதியை ஒழிக்கட்டும்; அதற்குப் பின் ஜாதிவாரி கணக்கெடுப்புக் குரலோ, இடஒதுக்கீடுக்கான குரலோ எழுகிறதா என்று பார்ப்போம். ஜாதியை ஒழிக்கும் இயக்கம் ஜாதி வாரி கணக்கெடுப்பைக் கோருகிறது. ஜாதியைக் காப்பாற்றும் கூட்டம் அது கூடாது என்று கூறுகிறது. காரணம் புரிகிறதா? மூன்று விழுக்காடு கூட்டம் எப்படி எப்படி எல்லாம் ஆதிக்கம் செய்கிறது என்கிற குட்டு உடைந்து விடுமே - அதன் விளைவு விபரீதம் ஆகி விடுமே என்ற அச்சம்தான் அய்யர் வா(ல்)ள்களுக்கு!
No comments:
Post a Comment