ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·   தேர்தல் சீர்திருத்தம் முழுமையாக இருக்க வேண்டும். வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதில் குழப்பங்கள் உள்ளது என மூத்த வழக்குரைஞர் .ஜி. நூராணி குறிப்பிட்டுள்ளார்.

· சுதந்திர போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காத பாஜக வரலாற்றை திரித்து எழுதுகிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தி இந்து:

· நீட் விலக்கு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஅய்) கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் ராஜ்பவன் பதிலளித்துள்ளது.

தி டெலிகிராப்:

· பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி, ராம், ராம் என முழக்கமிட வேண்டும் என்ற பாஜகவின் மிரட்டலுக்கு, மாஞ்சியின் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகினால், பா... அமைச்சர்கள் சாலையில் நிற்க நேரிடும் என பதிலடி தந்துள்ளது..

   - குடந்தை கருணா

No comments:

Post a Comment