தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, ஜன.7 தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையுமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத் தரவு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக் கம் அளித்துள்ளது. தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபடும் என அரசு நீதிமன்றத் தில் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள் ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
இதை தொடர்ந்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட் சிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, புதிதாக உருவாக் கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து மாநக ராட்சிகள், நகராட்சிகள், பேரூ ராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இதற்காக, 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணை யம் திட்டமிட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரை செய்யும் பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், இடஒதுக்கீடு பணிகளையும் தேர்தல் ஆணையம் தீவிரப் படுத்தியுள்ளது. வார்டு வாரியாக இறுதி கட்ட வாக்காளர் பட்டி யல் நேற்று (6.1.2021) வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2022 பிப்ரவரியில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட் டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
வரும் பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள தேர் தல் ஆணையம், அதற்கான அறிவிப்பை ஜனவரி மாதம் 3ஆம் வாரம் வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment