எல்லை மீறாமல் ஆளுநர் செயல்பட வேண்டும் - வைகோ வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 28, 2022

எல்லை மீறாமல் ஆளுநர் செயல்பட வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

சென்னை, ஜன.28 மாநில அரசின் உரிமைகள், கடமைகளுக்கு உரிய மதிப்பளித்து எல்லை மீறாமல் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

.தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குடியரசு நாள் விழாவை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருந்த அறிக்கையை முழுமையாக ஆழமாக உள்வாங்கினால் ஒன்றிய பா... அரசின் செயல்பாடுகளையும், அதற்கு பின்னணியில் இருந்து இயக்கி வரும் கோட்பாடுகளையும் உயர்த்திப் பிடித்திருப்பது தெரிய வரும்.அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர்.

ஆனால் அவரின் வாழ்த்துச் செய்தி அந்த எல்லைகளை கட்டறுத்து தாண்டி இருப்பதை ஏற்க முடியாது. நீட்தேர்வு அவசியம் என்று பொருள்படும்படி மேலோட்டமாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.மேலும், இந்தி மொழிக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குவதையும், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான அறிவுறுத்தலையும் ஆளுநர் வழங்கி இருப்பதை பொறுத்துக் கொள்ள

முடியாது.

ஆளுநர் மாநில அரசின் உரிமைகள், கடமைகளுக்கு உரிய மதிப்பை அளித்து எல்லை மீறாமல் தமது பணிகளை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment