முழு ஊரடங்கையொட்டி மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

முழு ஊரடங்கையொட்டி மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை ரத்து

சென்னை, ஜன.7  தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்களின் படி கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் 6.1.2022 முதல் வார நாட்களில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை இயக்கப்படும்அதாவது, அனைத்து முனையங்களில் இருந்தும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணிக்கு முனையத்தை வந்தடையும்ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment