சென்னை, ஜன. 10- ஓய்வூதியர் களின் வீடுகளுக்கே சென்று, மின்னணு உயிர்வாழ் சான் றிதழ் அளிக்கும் சேவையை அஞ்சல் துறை தொடங்கி உள்ளது.
ஓய்வூதியர்களுக்கு, பயோமெட்ரிக் அடிப்படையிலான மின்னணு உயிர் வாழ் சான்றிதழ் (டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட்) அளிக் கும் சேவையை இந்தியா போஸ்ட் வங்கி மூலம் அஞ்சல் துறை தொடங்கியுள்ளது.
இந்த சேவையை அஞ்சல் ஊழியர்கள், கிராமப்புற அஞ்சல் சேவகர்கள் மூலம் குறைந்த கட்டணத்தில், ஓய் வூதியர்களின் வீடு தேடிச் சென்று வழங்குகின்றனர். இதன்மூலம், கரோனா தொற்றுக் காலத்தில், வங்கி கள், அலுவலகங்களுக்கு மூத்த குடிமக்கள் செல்லும் நிலை தவிர்க்கப்படுகிறது.
சென்னை நகர வடக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களி லும் இந்த சேவை வழங்கப் படுகிறது. அஞ்சல் தகவல் செயலி அல்லது http://ccc.cept.gov.in/covid/request.aspx இணையதளம் மூலம், வீடு தேடி வரும்சேவைக்கான வேண்டுகோளை அனுப்ப லாம். மின்னணு சான்றித ழுக்கு விண்ணப்பிக்க, http://jeevanpramaan.gov.in/ppouser/login என்ற இணைய தள இணைப்பில் உரிய படி வத்தை பதிவிறக்கம் செய்ய லாம் என்று சென்னை நகர வடக்கு மண்டலஅஞ்சலகங்க ளின் முதுநிலை மேற்பார்வை யாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment