கடவுள் கிருபை!
* உக்ரைனில் மக்களுக்கு உதவும் இஸ்கான் கிருஷ்ணன் கோயில்.
>> போர் வராமல் மக்களைக் காப்பாற்றி இருக்கக் கூடாதா?
ஒழுக்கக்கேடு!
* ஆக்கிரமிப்பு என்ற பெயரால் கோயில்களை இடிக்கக் கூடாதாம்!
- இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
>> ஆக்கிரமித்துக் கோயில் கட்டுவதுதான் ‘இந்து’வின் ஒழுக்கமோ!
* கல்விக் கட்டணங்களை வரைமுறைப் படுத்தும் நோக்கத்திலேயே ‘நீட்’ தேர்வு நடைமுறைப் படுத்தப்பட்டது.
- ‘இந்து தமிழ்திசை’ ஏடு தலையங்கம்
>> ஓ, அப்படியா! தகுதி - திறமைக்காகவே ‘நீட்’ என்று இதுவரை சொல்லி வந்தது என்னாச்சு?
பிரதமரா - சத்குருவா?
* மகா சிவராத்திரியை முன்னிட்டு சத்குருவுக்கு பிரதமர் வாழ்த்து.
>> குருதானே இதுவரை சீடர்களுக்கு வாழ்த்துச் சொல்லிப் பழக்கம்!
நாசூக்கு...
* நமது நாட்டில் ஹிஜாப் அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை. அரசமைப்புச் சட்டம் அந்த உரிமையை வழங்கியுள்ளது.!
- முக்தார் அப்பாஸ் நக்வி
(ஒன்றிய அமைச்சர், பா.ஜ.க.)
>> பிரதமருக்கு நாசூக்காக சொல்கிறாரோ!
யாரை ஏமாற்றிட?
* இந்தியாவில் இருக்கும் தமிழ் உலகின் பழைமை யான மொழி
- பிரதமர் மோடி
>> இதனை சங்கராச்சாரியார்களிடம் சொல்லட்டும்!
சோப்ளாங்கி
* தமிழக மீனவர்கள் 8 பேர் - இலங்கைக் கடற் படையால் சிறைப்பிடிப்பு
>> இதனால் அறிவிப்பது என்னவெனில் இந்தியா உலக வல்லரசாக ஆகப்போகிறது.. ஆகப்போகிறது...
‘குலமாதாவுக்கு’ச் சிறையா?
* சென்னையில் சுற்றித் திரிந்த 585 மாடுகள் பிடிபட்டன.
>> இதே நிலை உ.பி.யில் நடந்தால் ‘கோ மாதா’ எப்படியெல்லாம் மாலை மரியாதையுடன் நடத்தப் பட்டு இருப்பாள்!
No comments:
Post a Comment