வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் சுகாதார கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் சுகாதார கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, மார்ச் 6 இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டம் - 2021, கிண்டியில் நேற்று (5.3.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

வளமான சுகாதார கட்டமைப்பு என்பது ஒரு மாநிலத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. வெளிநாட்டு நேரடி முத லீடுகளை ஈர்ப்பதில் சுகாதார கட் டமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது.நமது முதலமைச்சரின் தொலை நோக்குப் பார்வையான ஒரு டிரில்லியன் பொருளா தாரத்தை அடையும் குறிக்கோளில் தமிழ்நாடு சுகாதாரத் துறையும் பங்கெடுக்கிறது.

முக்கிய முன்னெடுப்பான மக் களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கடந்த சில மாதங்களாக பொதுமக்களின் இல்லம் தேடி மருத்துவ சேவைகள் வழங்கப்படு கின்றன. மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றும் பணி களைச் செய்வதன் மூலம்உலகிலேயே முன்னோடி திட்டமாக அறிவிக் கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள் ளனர்.

அதேபோல இன்னுயிர் காப் போம் திட்டம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதல் 48 மணிநேர அவசர உடனடி சிகிச்சை அளிப்பதோடு அதற்கான செலவி னங்களை அரசே ஏற்றுக் கொள் கிறது.

தமிழ்நாடு அரசு, இந்திய மருத்துவ முறைகளைச் சிறப்பாக அமல்படுத்தி, கரோனா பெருந் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. முதலமைச்சர் கூறியதுபோல மக்கள் நலன், தொழில் வளம், சமூக நீதி இவற்றின் மேம் பாட்டுக்காக தமிழ்நாடு அரசானது தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாடுத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன், அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, இந்திய தொழில் கூட்டமைப்பு தென் மண்டலத் தலைவர் சி.கே.ரங்கநாதன், தமிழகத் தலைவர் சி.சந்திரகுமார், மேனாள் தலைவர் எஸ்.சந்திரமோகன், துணைத் தலைவர் சத்தியகம் ஆர்யா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment