தேசிய அறிவியல் வார போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியருக்கு முதல் பரிசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

தேசிய அறிவியல் வார போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியருக்கு முதல் பரிசு

தேசிய அறிவியல் வாரத்தை (22.02.2022 - 28.02.2022) முன்னிட்டு போபால் School of Pharmacy and Research, People’s University   மற்றும் M.P. Council of Science and Technology இணைந்து Artificial Intelligence in Health Care என்ற தலைப்பிலான  கட்டுரைப்போட்டியினை நடத்தியது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறை பேராசிரியர்  எஸ்.பிரியதர்சினி கலந்து கொண்டு இணைய வழியில் தமது கட்டுரையினை சமர்ப்பித்தார்.  பல்வேறு நிறுவனங்களிலிருந்து பங்கு பெற்ற இக்கட்டுரைப் போட்டியில்  பேராசிரியர் எஸ்.பிரியதர்சினி முதலிடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். முதலிடம் பெற்ற பேராசிரியருக்கு கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment