தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் மெய்க் காவலர்போல இருந்தவருமான மானமிகு ஆற்காடு வீராசாமி அவர்கள் உடல்நலம் குன்றிய நிலையிலும், தனது 85 ஆம் ஆண்டு பிறந்த நாளின் மகிழ்வாக இன்று (21.4.2022) பெரியார் திடலில் அய்யா நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி தன் மரியாதையையும், நன்றி உணர்ச் சியையும் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.
அவர் உடல்நலம் பெற்று நீடு வாழ வாழ்த்துகிறோம்.
கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment