கடலூர் மாவட்ட கழக மகளிர் அணி சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

கடலூர் மாவட்ட கழக மகளிர் அணி சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

வடகுத்து, ஏப். 3-- திராவிடர் கழக மகளிரணி சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா கருத் தரங்கம் 24.3.2022 அன்று மாலை 7 மணி அளவில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப் பகத்தில் மண்டல மகளி ரணி செயலாளர் ரமா பிரபா, ஜோசப் தலைமை யில் மாவட்ட மகளிர் அணி தலைவர் முனியம் மாள், மாவட்ட மகளி ரணி செயலாளர் குணசுந் தரி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் தமி ழேந்தி, செயலாளர் சத் தியவதி ஆகியோர் முன் னிலையில் நடைபெற்றது. விஜயராஜ் வர« வற்புரை யாற்றினார். கவிஞர்  மலர் விழி கந்தசாமி அன்னை மணியம்மையாரின் அருமையும் பெருமையும் பற்றியும் உலக பெண்கள் தினம் பற்றியும் சிறப்புரை ஆற்றினார். கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சர்வதேச பெண்கள் தினம் என்பது பற்றியும், அன்னை மணியம்மையா ரின் அருந் தொண்டு குறித் தும் உரையாற்றினார். மாவட்ட தலைவர் தண் டபாணி, மண்டல செய லாளர் தாமோதரன், மண்டல தலைவர் அரங்க பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் சிவக்குமார், புலவர் ராவணன், கலைச்செல்வி, திராவிடமணி, ஓவியா, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், நூலக செய லாளர் கண்ணன், கவிஞர் தீபக் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

முடிவில் சாந்தி திரா விடமணி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment