கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை புதூர் பகுதியைச் சேர்ந்த பெரியார் பற்றாளர் கழகத் தோழர் எஸ்.பி. ஆறுமுகம் (ஸ்டேட் பாங்க் இந்தியா மேலாளர் - பணி ஓய்வு) 25.4.2022 அன்று இரவு 10 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அன்னாரது இறுதி நிகழ்ச்சி நேற்று (27.04.2022) காலை 10 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது குமரி மாவட்ட கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.இராஜசேகர் ஆகியோர் மறைந்த தோழரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

No comments:
Post a Comment