கொல்கத்தா, மே 30- இரண்டு ஆண்டு களுக்குப் பிறகு, இந்தியா -வங்க தேசம் இடையே மீண்டும் பயணி கள் ரயில் சேவை துவங்கியது. கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவல் தீவிரமானதால், இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், இந் தியா - வங்கதேசம் இடையேயான பந்தன் விரைவு ரயில், மைத்ரி விரைவு ரயில் பயணிகள் ரயில் களும் நிறுத்தப்பட்டது. தற்போது, கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நிறுத்தப் பட்ட ரயில் சேவைகள் சில இடங்களில் தொடங்கி உள்ளன. வங்கதேசத்துக்கான பயணிகள் ரயில் சேவை மே 29 (நேற்று) முதல் மீண்டும் தொடங்கும் என்று அறி விக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத் தாவில் இருந்து வங்கதேசத்தில் உள்ள குல்னாவுக்கு பந்தன் விரைவு ரயில் நேற்று (29.5.2022) முதல் இயக்கப்பட்டது.
இது குறித்து கிழக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் சக்ரவர்த்தி கூறுகையில், ‘‘இன்று காலை 7.10 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து பந்தன் விரைவு ரயில் வங்கதேசம் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் வாரத்துக்கு 2 முறையும், கொல் கத்தா - தாகா இடையிலான மைத்ரி விரைவு ரயில் வாரத்துக்கு 5 முறை யும் இயக்கப்படுகிறது. வங்கதேசத் தில் இருந்து சுற்றுலா, மருத்துவம் மற்றும் பொருட்கள் கொள்முதல் செய்வற்காக பயணிகள் வருகின்ற னர். மீண்டும் ரயில் சேவை துவக்கப் பட்டு உள்ளதால் இருநாடுகளையும் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு ரயிலில் உள்ள அனைத்து இடங் களும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன,’’ என்றார்.
No comments:
Post a Comment