வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கழக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கழக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பு

செந்துறையில் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் மனிதனை மனிதன் சுமக்கும் அவலத்திற்கு தடை விதித்தது  குறித்து மன்னார்குடி ஜீயர் மத கலவரத்தை தூண்டும் வகையிலும் தமிழ்நாடு அரசுக்கு கொலை மிரட்டல் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைச்சர்கள் பொது வெளியில் நடமாட விடமாட்டோம் என்ற அவரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது நிகழ்வில் மண்டல இளைஞரணி செயலாளர்  செந்தில்குமார் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இளவரசன் ஒன்றிய தலைவர் மா சங்கர் செயலாளர் முத்தமிழ்ச்செல்வம் மாவட்ட பொறுப்பாளர் சோ க சேகர் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் தமிழரசன் குழுமூர் சுப்பராயன் பழமலைநாதபுரம் கருப்பசாமி உள்ளிட்ட தோழர்கள் செந்துறை காவல் நிலைய ஆய்வாளர் அன்பழகன் அவரிடம் புகார் மனு வழங்கப்பட்டது ஜீயருக்கு எதிரான சட்டப் பிரிவுகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153,153A, 504,505(1)(b),505(1)(c),505(2), 189, உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யலாம்.


No comments:

Post a Comment