ஈரோடு, ஜூன் 5 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள கலைஞர் அவர்களின் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,கோ.பாலகிருஷ் ணன், தந்தை பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிற்சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் தே.காமராஜ்,சா.ஜெபராஜ் செல்லத் துரை, ஈரோடு மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் பி.என்.எம்.பெரியசாமி, திமுக தலைமை கழக சொற்பொழி வாளர்ஈரோடு. ப.இளையகோபால், ஈரோடு மாவட்ட கழக இளைஞரணி தலைவர் அஜ்சூரியா, மாலதி பெரியசாமி,ஈரோடு மாநகராட்சி 2ஆவது மண்டல தலைவர் காட்டு.சுப்பு, ஈரோடு மாநகர திமுக இலக்கிய அணி துணை அமைப் பாளர்.வீரமணி ஜெயக்குமார், திராவிடர் பேரவை பொருளாளர் பாபு,திமுக க.ப.ஆறு முகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் முத்தமி ழறிஞர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

No comments:
Post a Comment