புதுடில்லி,ஆக.26- ஆயுதப் படைகளில் ஆள் சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்திற்கு தடை விதிக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுத்ததோடு, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொண் டுள்ளது.
டில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தினர். அப்போது, திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஒருங்கிணைந்த பதிலை தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டது.
ஜூன் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டம், 17 முதல் 21 வயது வரையிலான பாதுகாப்புப் படைகளில் 25 சதவீதத்தினரை இன்னும் 15 ஆண்டுகளுக்குத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இளைஞர்களைச் சேர்ப்பதற்கு வழங்கு கிறது. கடந்த மாதம் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. பின்னர், 2022-இல் இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை 23 ஆண்டுகளாக அரசாங்கம் நீட்டித்தது.

No comments:
Post a Comment