தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. அவர்கள் 100 'விடுதலை' ஆண்டு சந்தா தொகை ரூ.2,00,000த்தை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மண்டல செயலாளர் கு.குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என். கணேசன், ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோரிடம் மகிழ்வுடன் வழங்கினார் (25-08-2022).
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே .கணேசன் விடுதலைக்கு 50 ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூபாய் ஒரு லட்சத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரனிடம் வழங்கினார். உடன்: விருத்தாசலம் கழக மாவட்ட தலைவர் இளங்கோவன், கடலூர் கழக மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமநாதன். (22.8.2022)
திருவாரூர் எஸ்.எஸ். மணியம் இல்ல மணவிழாவில் மணமக்கள் அருள்மணி - ஜெயசுதன் ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.20,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கே. இளங்கோவன், விஜய சாமுண்டீஸ்வரி. (23.8.2022)



No comments:
Post a Comment