தன்மானத் தந்தையால் தமிழினம் பெற்றது விடுதலை!
தந்தையே தனையனை ஆசிரியராய் அமர
வைத்ததும் விடுதலை!
படிக்கத் தெரிந்தவன் படித்தால் அது ஏடு!
படிக்காத பாமரனுக்கும் பகுத்தறிவு பாடம்
நடத்துவது விடுதலை நாளேடு!
பஞ்சம ஆகம தந்திரங்கள் நிறைந்தது
மற்ற பத்திரிக்கை!
அஞ்சாமல் அவற்றை நாள்தோறும்
இது எதிர்க்கும் எச்சரிக்கை!
சமத்துவத்தை உச்சரிக்காத இதழையும்
சமூகநீதியின் பக்கம் சாய்த்திட்ட நாளிதழ்!
சகாப்தங்கள் போற்றும் 88ஆம் ஆண்டில்
அடியெடுத்து வைத்திட்ட விடுதலையின்
ஆசிரியராய் 60 ஆண்டுகள்!
பத்திரிக்கை துறையே ஆச்சரியம் கொள்ளும்
உலக அதிசயம்!
உம் ஆயுளை நீட்டிக்கும் அருமருந்தாய்
தமிழினத்தின் கெடுதலைப் போக்கும் விடுதலை!
உளமாற வாழ்த்தும்
முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள்
பெரியார் மருந்தியல் கல்லூரி
திருச்சி - 21.
No comments:
Post a Comment