சென்னை, செப்.8 சிமேட்ஸ் பொறியியல் கல்லூரியில் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து முதல்வர் மற்றும் துணைவேந்தர் உரை நிகழ்த்தினார்.
ஆசிரியர் சமூகத்தின் முயற்சிகளை ஊக்குவிக்கவும் பாராட்டவும் விரும்பிய மாணவர்கள், வினாடி வினா, கயிறு இழுத்தல், மெதுவான சைக்கிள் ஓட்டுதல், வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் பலவிதமான புத்துணர்ச்சியூட்டும் அறிவுத் திறன் போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர். இப்பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் உதவியுடன் மாணவர்கள் தங்கள் தொழில் முனைவோர் திறன்களை வெளிப்படுத்தும் பல வகையான அரங்குகளும் இந்த நிகழ்வில் அமைக்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற இப்பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment