பள்ளிகளில் மாணவர்கள் இடை நிறுத்தம்: 17 மாநிலங்களில் அதிகரிப்பு சாமியார் ஆளும் மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் மாவட்டம் தோறும் இடை நிற்றல் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

பள்ளிகளில் மாணவர்கள் இடை நிறுத்தம்: 17 மாநிலங்களில் அதிகரிப்பு சாமியார் ஆளும் மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் மாவட்டம் தோறும் இடை நிற்றல் அதிகரிப்பு

புதுடில்லி, ஜூன் 13 - நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி களில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நிற் பது அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் ஒன்றிய கல்வி அமைச் சகத்தின் திட்ட ஒப்புதல் வாரிய (பிஏபி) கூட்ட நடவடிக்கை குறிப்புகளில் இருந்து தெரிய வந்துள்ளது. அதில் தெரிய வந்துள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:

2021_20-22ஆ-ம் ஆண்டில் உயர் நிலைப்பள்ளி அளவில் பள்ளி களில் இருந்து மாணவர்கள் இடையில் நிற்பது பீகார் மாநி லத்தில் 20.46 சதவீதமாகவும், குஜராத்தில் 17.85 சதவீதமாகவும், அசாமில் 20.3 சதவீதமாகவும், ஆந்திராவில் 16.7 சதவீதமாகவும், பஞ்சாபில் 17.2 சதவீதமாகவும், மேகாலயாவில் 21.7 சதவீதமாகவும், கர்நாடகத்தில் 14.6 சதவீதமாகவும் இருந்துள்ளது.  மேற்கண்ட 7 மாநிலங்களில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது தேசிய சரா சரியான 12.6 சதவீதத்தைவிட அதி கம் ஆகும். மேற்கு வங்காளத்தில் 2020_20-21ஆ-ம் ஆண்டுடன் ஒப்பி டுகையில் 2021_20-22ஆ-ம் ஆண்டில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது குறைந்துள்ளது. இது தொடக்கப்பள்ளி அளவிலாகும்.

டில்லியிலும் ஏராளமான மாண வர்கள் இடையிலேயே படிப்பை நிறுத்துகின்றனர். (மேற்கு வங்காளம், டில்லி நிலவரம் பற்றிய புள்ளி விவ ரங்கள் வெளியாகவில்லை).  மத்திய பிரதேச மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நின்று விடுவது 2020_20--21இ-ல் 23.8 சதவீதமாக இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டி லேயே இது 10.1 சதவீதமாக அதிர டியாகக் குறைந்துள்ளது. 

மராட்டிய மாநிலத்தில் உயர் நிலைப்பள்ளி அளவில் மாண வர்கள் இடையிலேயே நிற்பது 2020_20-21இ-ல் 11.2 சதவீதமாக இருந்து, மறு ஆண்டில் 10.7 சதவீதமாகக் குறைந்தது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாஸ்தி (23.3 சதவீதம்), புதான் (19.1 சதவீதம்), எட்டவா (16.9 சதவீதம்), காசிப்பூர் (16.6 சதவீதம்), எட்டா (16.2 சதவீதம்), மகோபா (15.6 சதவீதம்), ஹர்தோய் (15.6 சதவீதம்), அசம்கார் (15 சதவீதம்) மாவட்டங் களில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது அதிகரித்துள்ளது. * ராஜஸ்தான் மாநிலத்தில் மாண வர்கள் இடையிலேயே படிப்பை நிறுத்துவது தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் பழங்குடி மற் றும் முஸ்லிம் மாணவர்கள் படிப்பை இடையிலேயே நிறுத் துவது அதிகமாக உள்ளது இவ் வாறு அந்த தகவல்கள் தெரிவிக் கின்றன.

No comments:

Post a Comment