ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
புதுடில்லி, மே 14 - கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட் டுள்ளது. மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் 17- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கின்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு தொழில்கள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ரயில் போக்குவரத்தை மீண்டும் துவங்க முடிவு செய்த ரயில்வே, ஜூன் 12 முதல் படிப்படியாக ரயில் சேவை துவக்கப்படும் என அறிவித்து, அதபடி முதற்கட்டமாக 15 ஜோடி ரயில்கள் டில்லியில் இருந்து நாடு முழுவதும் உள்ள 15 முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படு கின்றன. இந்த ரயில்கள் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டதால் கரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்தனர். தமிழக முதலமைச்சரும் இந்த கருத்தை முன்வைத்து, ரயில் மற்றும் விமான சேவையை தொடங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று தமிழகத் தில் தமிழக வருகிற 31- ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து கிடையாது அறிவிக்கப்பட்டது. முன்பதிவு செய்யப்பட்ட 2 ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
இந்நிலையில், அட்டவணைப்படி ஜூன் 30 ஆம் தேதி வரையில் இயங்கும் ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்துள்ள அனைத்து ரெயில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்து, கட்டணத்தை திருப்பி கொடுக்க உள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வாரியம் சுற்ற றிக்கை அனுப்பி உள்ளது. அதில், ‘அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், புறநகர் ரெயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 30 ஆம் தேதி வரையில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் செயல்முறை தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட்டு, முழு கட்டணமும் திருப்பித் தரப்படும். சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment