மத்திய  நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 18, 2020

மத்திய  நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்!

அனைத்தும், தனியார் மயமாம்?


புதுடில்லி, மே 18, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அய்ந் தாவது கட்டமாக நேற்று (17.5.2020) அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:


மே 16ஆம் தேதி வரை 8.19 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக தலா ரூ.2,000 வீதம் வங்கிக் கணக்கில் செலுத் தப்பட்டுள்ளது. ஜன்தன் கணக்கு மூலம் 20 கோடி மக்கள் பயனடைந் துள்ளனர். 6.81 கோடி பேர் இலவச எரிவாயு உருளைகளை பெற் றுள்ளனர். ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக் கான கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசே ஏற்கும். 15 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்கும். கரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை வாய்ப் புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப் படும்.


இலவச உணவுப் பொருட்கள்


அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.


கரோனா தடுப்பு நடவடிக்கை


கரோனா தடுப்பு சுகாதார நடவடிக் கைகளுக்கு இதுவரை ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆய்வகங்கள், சோதனை கிட்களுக்கு ரூ.550 கோடி வழங்கப்பட்டுள்ளது. 11.08 கோடி ஹைட்ராக்சிகுளோரோ குயின் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இதுவரை ரூ.4,113 கோடி நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பாது காப்பு உபகரணங்கள் 51 லட்சமும், N-95 மாஸ்க்குகள் 87 லட்சமும் விநியோகிக்கப்பட்டு உள்ளன.


தொழில் சார்ந்த அறிவிப்புகள்


தொழில்புரிவதை எளிமையாக்க அடுத்தக்கட்ட சீர்திருத்தங்களை அரசு செய்யவுள்ளது. ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. சிறு நிறுவனங்கள், ஒரு நபர் நடத்தும் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் தொடர் பான அபராதங்கள் குறைக்கப்படுகிறது. நிறுவனங்களின் 7 விதிமீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் கை விடப்படுகின்றன. சொத்துகள் பதிவு எளிமையாக்கப்படும். வர்த்தக சர்ச் சைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.


அனைத்தும் தனியார்மயம்


குறிப்பிட்ட சில துறைகள் தவிர்த்து மற்ற அனைத்து பொதுத்துறை நிறு வனங்களும் தனியார்மயமாக்கப்படும். பொது முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் எவை? தனியார் முதலீட்டுக்கு அனுமதிக்கப்படாத பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து அரசாணை வெளியிடப்படும்.


மாநிலங்களுக்கு நிதி


வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு ஏப்ரல், மே மாதங் களில் ரூ.12,390 கோடி வழங்கப்பட் டுள்ளது. ஏப்ரலில் மாநிலங்களுக்கு வரி வருவாய் பங்காக ரூ.46,038 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு நிதியாக ஏப்ரலில் ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.


திவால் நடவடிக்கைகளில் மாற்றம்


கரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் திவால் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும். அதாவது ஓராண்டிற்கு திவால் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் திவால் சட்டம் தொடர்பான விதிமுறைகளில் தளர்வு செய்யப்படும். கரோனா நெருக்கடியால் ஏற்பட்ட கடன்கள் வாராக்கடன்களாக வரையறுக்கப்படாது.


சுகாதாரத்துறை அறிவிப்புகள்


பொது சுகாதாரத்திற்கு செலவிடப் படும் தொகை அதிகரிக்கப்படும். சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மேம்படுத்தப்படும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் நோய்த் தொற்று தடுப்பு பிரிவு உரு வாக்கப்படும்.


கல்வித்துறை சார்ந்த


அறிவிப்புகள்


ஆன்லைன் கல்வி முறையை அணு குவதற்கு உதவும் PMeVIDHYA திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். மே 30ஆம் தேதி முதல் 100 பல்கலைக் கழகங்கள் ஆன்லைன் படிப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்படும்.


இ-_-பாடசாலை இணையதளத்தில் மேலும் 200 புதிய பாடப்புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு வகுப்பிற்கும்


ஒரு சேனல்


பள்ளிக்கல்விக்காக ஏற்கெனவே


3 சேனல்கள் உள்ளன. மேலும் 12 சேனல் கள் தொடங்கப்படும். இ_-வித்யா  திட்டத்தின் கீழ் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்கப் படும். பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு டிஜிட்டல் பாடங்கள் உருவாக்கப்படும். சுவயம் பிரபா சேனல்கள் மூலம் இ_-லேர்னிங் எனப்படும் மின்னணு கற்றல் ஊக்கு விக்கப்படும்.


கடன் வரம்பு உயர்வு


மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.4.28 லட்சம் கோடி கூடுதலாக மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும்.


No comments:

Post a Comment