சென்னை, மே 14- பி.எம்.டபிள்யு குரூப் இந்தியா முன்னோடியில்லாத வகையில் கோவிட்-19 எதிர்த்துப் போராட தன்னலமின்றி நாள் முழுவதும் உழைத்து வரும் மருத்துவர்களுக்காக சிறப்பு சலுகை விற்பனையை அறிவித்துள்ளது.
இந்நிறுவன செயல் தலைவர் அர்லிண்டோடீக்ஸீரா, இந்த மாத தொடக்கத்தில், குரூப் இந்தியா அதன் பல்வேறு முயற்சிகள் மூலமாகவும், டெல்லி மற்றும் சென்னையில் மருத்துவ வசதிகளுக் காக முக்கியமான பராமரிப்பு உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலமாகவும் கோவிட்-19 அய் எதிர்த்துப் போராடுவ தற்கான தனது பங்களிப்பை வழங்கியது.
பொது சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து வருகின்றனர். இவர்களை பாராட்டும் வகையில் என்ஜின் ஆயில் சர்வீஸ் என்பது மருத்துவ சகோதரத்துவத்திலிருந்து எங்கள் புரவலர்களின் தன்னலமற்ற தியாகத்திற்காக எங்கள் தரப்பிலிருந்தும் மற்றும் எங்கள் விற்பனை பங்குதாரர்கள் தரப்பிலிருந்தும் பாராட்டப்படுவதற்கான ஒரு தருணம் என கூறினார்.
No comments:
Post a Comment