* சீனாவிடமிருந்து விலகி சுதந்திரமாக செயல்படாவிட்டால் உலக சுகாதார நிறுவனம் என்ற அமைப்பிலிருந்து அமெரிக்கா ஒரு மாதத்தில் வெளியேறும் என்று அமெரிக்கா மிரட்டல்.
* புகைப்பிடிக்கும் பழக்கத்தை கை விட்டால், தீவிர கரோனா பாதிப்பை தவிர்க்கலாம் என அமெரிக்க புற்றுநோய் மருத்துவர் ஜேசன் ஷெல்ட்சர் தெரிவித்துள்ளார்.
* சென்னையில் இன்று முதல் வீடுதோறும் கரோனா சோதனை.
* அ.இ.அ.தி. மு.க.வில் ஊராட்சி செயலாளர்கள் பதவிகள் ரத்து.
* சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிப்பு.
* ஜூலை மாதம் முதல் வாரத்தில் பள்ளி வகுப்புகள் தொடங்க அனுமதிக்கலாம் என தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளன.
* உம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
* பணிபுரியும் இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்குமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவு.
* தமிழகத்தில் காற்றாலை மூலம் நாள்தோறும் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி.
* பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் என மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவிப்பு.
No comments:
Post a Comment