தஞ்சைத் தரணியிலே ஓர் ஊருணி !
ஊருணி அல்ல பெருங் கருணைக் கடல்!
ஆம் ! அது தான் பூண்டி புஷ்பம் கல்லூரி.
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்து இன்று உலகெங்கும் பெருமையுடன் வாழ வழி வகுத்த கல்வித் தொட்டில்.
கண்டிப்பும், கனிவும் கலந்த கல்லூரி . ஆயிரக்கணக்கான மாணவர்கட்கு தங்கள் சொந்த பணத்தைக் கட்டிப் படிக்க
வைப்பது, ஏழை மாணவர்களைத் தங்கள் இல்லத்திலேயே தங்க வைத்துப் படிக்க வைத்து முன்னேற்றியது என்று பல தொண்டுகள்.
அதன் தாளாளர் பெரும் வள்ளல் அய்யா பூண்டி துளசி அய்யா அவர்கட்கு மே 11 ஆம் நாள் 92 வது பிறந்த நாள் .
அவர் வாழ்க பல்லாண்டு, நலமும் மகிழ்வும் நிறைந்து வாழ்க என்று வாழ்த்துச் சொல்லி மகிழ்கின்றோம்.
அன்பு நிறை,
மரு.சோம.இளங்கோவன்
இயக்குநர், பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா.
No comments:
Post a Comment