வடசென்னை மாவட்டத் துணைத் தலைவரும், விடுதலை செய்திப் பிரிவில் பணியாற்றும் செம்பியம் கி.இராமலிங்கம் தாயாரும், நினைவில் வாழும் கிருட்டினன் இணையருமாகிய கி.சரோஜா (வயது 78) சிறிது நாள்களுக்குமுன் வீட்டிலேயே கீழேவிழுந்து எலும்புமுறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார். இன்று (9.5.2020) காலை சிகிச்சை பலனின்றி மறைந்தார். மறைவு தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் கழக நிருவாகிகள் இராமலிங்கத்திடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தனர். சென்னை திருவிகநகர் கென்னடி சதுக்கம் முதன்மைச் சாலை எண் 33,34 அவர் இல்லத்தில் இறுதி மரியாதைக்கு உடல் வைக்கப்பட்டு, இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை திருவிகநகர் தாங்கல் மயானத்தில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. மகன்கள் கி.சம்பத், கி.இராமலிங்கம், கி.ஆனந்த், கி.மணிவண்ணன், கி.இளங்கோ மற்றும் மகள் திலகவதி உள்ளனர். தொடர்புக்கு கி.இராமலிங்கம்செல்பேசி எண் 9840217114
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment