சென்னை, ஜூன் 10 சென்னை மேற்கு மாவட்டக் தி.மு.கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தி.மு. கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கை வருமாறு:
திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், தலைவர் கலைஞரின் அன்பையும் ஆதரவையும் அளவின்றிப் பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோ தரர், பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்ப ழகன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தே விட்டார் என்ற செய்தியை ஏற்க ஏனோ என் மனம் மறுக்கிறது.
கரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க, தி.மு. கழகம் முன்னெடுத்த செயல்திட்டங் களைச் சிறப்புடன் நிறைவேற்றுவ தற்காக சிறிதும் ஓய்வின்றி களப்பணி யாற்றி, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட தனது உடல்நிலை மேலும் பாதிக்கப் பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச் சைப் பிரிவில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்கள், சிகிச்சை பலனின்றி இன்று (10-.6.-2020) நம்மை விட்டுப் பிரிந்து விட் டார். மக்கள் பணியில் தன்னை அர்ப் பணித்துக்கொண்டு, அதன் காரண மாக நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தி, பொதுவாழ்வின் தியாக தீபமாக சுடர் விட்டொளிரும் சகோதரர் ஜெ.அன்ப ழகனை நான் எப்படி மறப்பேன்? என்னை நானே தேற்றிக் கொள்ள முடியாமல் தேம்பி அழும் நிலையில், சகோதரர் அன்பழகன் அவர்தம் குடும்பத்தார்க்கும், உறவி னர்களுக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்பு களுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது அவருடைய பாசமுகம் காண்பேன்?
ஜெ.அன்பழகனின் பொதுவாழ்வு -_ கழகப்பணி - தியாக உணர்வுக்குத் தலைவணங்கி, கண்ணீர் பெருக்கு வதன்றி, வேறு வழி எனக்குத் தெரிய வில்லை. கழகத்தின் தீரமிக்க உடன் பிறப்பு - மக்கள் பணியிலேயே தன்னுயிர் ஈந்த அன்புச்சகோதரர் ஜெ.அன்பழக னின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கழகத்தின் சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கழகக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதுடன், கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்து, ஜெ.அன்பழகன் அவர்களின் தியாக வாழ்வைப் போற்றுவோம்! திராவிட இயக்கம் மறவாது அந்தத் திருமுகத்தை!
இவ்வாறு அவர் இரங்கல் அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment