தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் துறை உறுப்பினர்கள் நியமனத்தில் தாமதம் ஏன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 24, 2020

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் துறை உறுப்பினர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் துறை உறுப்பினர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்?


மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி


புதுடில்லி,ஜூலை24, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 4 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் சுற்றுச்சூழல் நிபுணத் துவம் பெற்ற உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த, உச்சநீதிமன்றம், சுற்றுச்சூழல் பிரச்சினை என்பது தற்பொழுது சர்வதேச அளவிலும் கவனத்தை பெற்றுள் ளதாக கூறியுள்ளது. இது போன்ற சூழலில், குறித்த நேரத்தில் நியமன அறிவிக்கையை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப் பியுள்ளது.  மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் துறையில் நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர்கள் நியமனத்தில் ஏற் பட்டுள்ள தாமதம் அதிர்ச்சி அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment