தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றிய திராவிடர் கழகத்தின் செயலாளர் தமிழ்தம்பி (ராஜா) கரோனாவில் பாதிப்புக்கு உள்ளாகி நேற்று 17.8.2020 தேனி மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சை பயனின்றி மறைவுற்றார். தகவல் அறிந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், அவரது குடும்பத்தினரி டம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிகுந்த கவலையுடன் ஆறுதல் கூறினார்.
மறைவுற்ற தமிழ்தம்பி உடலுக்கு திராவிடர் கழகத்தோழர்களுடன் செங்கதிர் இயக்கம், ஆதித்தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். நேற்று மாலை 3 மணி அளவில் தேனி மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. மறைவுற்ற தமிழ்தம்பி 29 முறை குருதி கொடுத்த குருதிக் கொடையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment